Posts

Showing posts from January, 2024

நாட்குறிப்பு - 01.02.2024 -தமிழ்ச்செல்வி ஜி.ஜே (Managing Trustee)

Image
  மனம் கனத்துக்கிடக்கிறது. கையில் எடுத்த வேலை பெரிதோ என்று மனம் மருகிப்போகிறது. நாய்க்குட்டிகளின் மரணம் அதீத வலியை தின்னக்கொடுக்கிறது. நான் சோர்ந்துவிட்டேன். என்னால் சந்தோஷமாக இருக்க முடியவில்லை. நான் இன்னும் நாய்குட்டிகளுக்கான அந்த வீட்டை கட்டிமுடிக்கவில்லை. பணம் இல்லாமல் பணிகள் பாதியில் நிற்கிறது. அந்த கட்டடத்தை பூச வேண்டும். மின்சாரம் வாங்க வேண்டும். பென்சிங் போட வேண்டும். நாய்குட்டிகள் அந்த நிலத்தில் சுதந்திரமாக விளையாட வேண்டும். மற்ற நிலத்துக்காரர்களுக்கு தொந்தரவாகக் கூடாது. அதோடு உடல்நிலை சரியில்லாத நாய்குட்டிகளை தனித்தனியாக தங்க வைக்க அறை வேண்டும். கூண்டு அவர்களுக்கு ஆரோக்கியமானதாக இல்லை. நான் இன்னும் இரு தாய்மார்களுக்கு உதவ விரும்புகிறேன். அதில் ஒருவர் மிகவுமே உதவி தேவைப்படக் கூடியவர். மருத்துவ உதவியும் அவருக்குத் தேவை. குறைந்த பட்சம் உணவுத் தேவையையாவது பூர்த்தி செய்யலாமே என்று தோன்றுகிறது. உதவுங்கள்… அவர் என்னிடம் வாக்கர் கேட்டார்… வாக்கர் வாங்குவதற்கான தொகையை யாரேனும் கொடுத்து உதவினால் மகிழ்வேன். வாகனங்களை நிதானமாக ஓட்டுங்கள். உங்கள் உயிர் உங்களுக்கு முக்கியம். ...

நாட்குறிப்பு - 23.01.2024 -தமிழ்ச்செல்வி ஜி.ஜே (Managing Trustee)

Image
  இந்த கடுமையான நாட்கள் என் வாழ்க்கையின் இருண்ட காலம். நாய்க்குட்டிகள் எனக்கு எந்த அளவிற்கு மகிழ்ச்சி அளித்ததோ, அந்த அளவிற்கு வருத்தத்தையும், ஏச்சுக்களையும் கொடுத்தது. நாய்களால் பெருந் துயரத்திற்கு ஆளானேன். உன்னால முடிஞ்சா வளர்க்கனும், இல்லாட்டி எங்கயாச்சும் ரோட்டுல கொண்டு போய் விடு… குடும்பத்தினர் பின்வாங்கத் துவங்கினர். உதவிகள் கிடைக்கவில்லை. மனச்சோர்வில் இருந்து வெளிவர நாய்க்குட்டிகள் செய்த அத்தனை உதவிகளும், நாய்குட்டிகளாலேயே இயலாமைக்கும், மனச்சோர்விற்கும், தள்ளப்பட்டேன். ஒவ்வொரு நாய்குட்டி இறக்கும் போதும், நான் பெற்ற குழந்தைகளே இறப்பது போல மனமும் உடலும் நடுங்கியது. முதல் முறை புத்திர சோகத்தை, முதல் கருப்பன் விபத்தில் இறந்த போது அடைந்தேன்.   அதன் பிறகு சில மாதங்கள் மகிழ்ச்சியும், அதன் பின் சோகமுமாக கடந்தது. சமீபத்தில் ஆறு நாய்குட்டிகளில் ஒரு ஆண் குட்டி தான் மீதம், பயந்துகொண்டு போய் குடற்புழு நீக்கம் செய்ய கொண்டு வந்த ஒரு குட்டியை அவள் தாயிடமே கொண்டு போய் விட்டேன்.   இரண்டு நாட்களாக அவளைக் காணவில்லை. மனம் அவளை தேடுகிறது. என் இயலாமை என்னால் அவளைக் கண்டு பிடிக்க முடியவி...