Posts

நாட்குறிப்பு - 10.08.2024 -தமிழ்ச்செல்வி ஜி.ஜே (Managing Trustee)

Image
 இன்றொரு ஆச்சர்யமானா நாள்! என் இயலாமை நிமித்தம் நான் இறந்துவிட வேண்டும் என்று மீண்டும் ஆசித்தேன். நேற்று இரவு மழை. மழையில் என்னால் நாய்களுக்கு உணவு கொடுக்க செல்ல முடியவில்லை. முன்பு போல் இல்லை. இப்போது மழை என்னை நடுக்கமுறச் செய்கிறது. குளிர் என்னை ஆட்கொண்டு வதைக்கிறது.  இரவு முழுவதும் உறக்கம் வரவில்லை. அவர்கள் என்னை எதிர்பார்ப்பார்கள், நான் உணவு கொண்டு வருவேன் என்று காத்திருப்பார்கள்.  நான் போகாவிட்டாலும் அவர்களுக்கு உணவு கொடுக்க எப்படியும் எவரையேனும் அனுப்புவேன். அதற்கு நேற்று வாய்ப்பில்லாமல் போனது.  காலையில் சீக்கிரம் வருகிறேன் என்று கூறிய திவ்யாவும் வரவில்லை. எனக்கு அழுகை வந்தது. அப்போது தான் காலை 5 மணிக்கு சங்கு ஊதிய அந்த நேரத்தில், ஏன் இன்னும் எனக்கு மரணம் வரவில்லை என்று தோன்றியது. திவ்யா ஆறரை மணிக்கு வந்தாள்! நாங்கள் உணவு கொடுக்க போன போது, அங்கு ஒரு சம்பவம் அரங்கேறியது. மீண்டும் வசவுகள் அதை நாய்க்காரி நாவலில் விரிவாக எழுத இருப்பதால் இங்கு வேண்டாம்.  எனக்கு யாரையும் கஷ்டப்படுத்தும் நோக்கம் இல்லை. ஷெல்டர் இருக்கும் இடம் சுற்றி பென்சிங் போட வேண்டும். இப்பொது ...

நாட்குறிப்பு - 09.08.2024 -தமிழ்ச்செல்வி ஜி.ஜே (Managing Trustee)

Image
மெல்ல மெல்ல தூசி போல தூரல் தரையை தொட்டுக்கொண்டிருந்தது. நானும் திவ்யாவும், ஷெல்டருக்கு சென்றோம் போகின்ற வழியிலேயே என்னை திட்டியவர்கள் என்னை கடந்தார்கள். முன்பெல்லாம் அவர்களை பார்த்து புன்னகைப்பேன். திட்டு வாங்கியப் பிறகு புன்னகை வரவில்லை. ஒதுக்கம் தான் வந்தது. சரி போகட்டும் எல்லாம் சரியாகிவிடும். அடுத்து என்ன? மூக்குக்கு மேலே சிராந்து எலும்பு தெரிந்த நாய் ஒன்றை பார்த்தேன். அது என்னை கண்டுக்கொள்ளாமல் ஓடிக்கொண்டிருந்தது. இந்த முறை வீடியோ எடுக்க என்னிடம் மொபைல் இல்லை. சில நேரம் இல்லை... இல்லை பல நேரம் மொபைலில் இருந்து விலகி இருக்க விரும்புகிறேன்.  மணி என்னை விரட்டினான். அவன் மீன் விற்பவர்களின் நாய். அவனின் காதினையும், வாலையும் அறுத்திருக்கிறார்கள். இது ஏதோ வழக்கமாக இருந்தாலும், பாவம் அவனுக்கு வலித்திருக்கும். அவன் மனிதர்களை கண்டால் பயப்படுவான்.  இரண்டு ட்யுமர் வந்த பெண் நாய்களை பார்த்தேன். இப்போது அருணாச்சலா காப்பகத்திற்கு போன் செய்ய முடியாது. விஷ்வா சாரை பார்த்தே வெகு நாட்கள் ஆகிவிட்டது. சில நேரம் அந்த நிறுவனம் முன்பு இருந்தது போல அன்னியோன்யமாக இல்லாமல், அந்நியமாகத் தெரிகிறது. ந...

நாட்குறிப்பு - 7.08.2024 -தமிழ்ச்செல்வி ஜி.ஜே (Managing Trustee)

Image
அன்புள்ள நண்பர்களுக்கு, ஒத்த கருத்துடையவர்கள் நண்பர்களாம்! இந்த பதிவை நான் கடிதமாகத்தான் துவங்குகிறேன். பேரன்பும் கருணையும் உள்ள உங்களோடு பேசுகிறேன்.  எழுத்தாக வரும் என் குரலை செவிமடுத்து எனக்கு செவி சாயுங்கள். நான் தங்கள் அனைவரின் உதவிக்காகவும் காத்திருக்கிறேன். நாய்கள் எனக்காக காத்திருக்கிறார்கள். நான் அவர்கள் பார்வையில் எப்படி தென்படுகிறேன் என்று தெரியாது. நான் அவர்களுக்கு, அன்பையும் இரக்கத்தையும் உணவையும், மருத்துவ உதவிகளையும் கொடுக்கக் கூடியவர்களாக இருக்கிறேன். இதையெல்லாம் செய்ய உங்கள் உதவி எனக்கு தேவை. ஒத்த கருத்துடைய நண்பர்கள் என் தேடலாக இருக்கிறார்கள்.  ஒவ்வொரு நாளும் செலவுகள் அதிகரிக்கிறது. ஷெல்டர் கட்டவும், பென்சிங் போடவும் பணத் தேவைகளும் அதிகரிக்கிறது. நான் கையில் எடுத்த நாய்கள் அருகில் உள்ளவர்களின் விளைநிலங்களுக்கு செல்வதால், விஷம் வைத்து கொள்வதாக அடிக்கடி கூறுகிறார்கள். எனக்கு தான் நாய்கள் குழந்தை, அவர்களுக்கு துன்பம் தரும் விலங்கு தானே. அடிக்கடி இது போன்ற சூழலை சந்திப்பது பெரும் மன உளைச்சலை தருகிறது.  100 அடி அளவுள்ள பென்சிங் கம்பியின் விலை  5000 ரூபாய்...

நாட்குறிப்பு - 17.02.2024 -தமிழ்ச்செல்வி ஜி.ஜே (Managing Trustee)

Image
  இன்னும் நான் சோர்வில் இருந்து மீளவில்லை. எனக்குள் அநேக கேள்விகள் எழுந்த வண்ணம் இருக்கிறது. அந்த நாய்க்குட்டி இறந்துவிட்டதாக கூறினார்கள். எனக்குள் குற்ற உணர்வு எழுந்தது. அதை நான் என்னுடனேயே வைத்திருந்திருந்தால், அவள் உயிரோடு இருந்திருப்பாளோ என்ற எண்ணம் மேலோங்க, இரவில் உறங்க முடியாமல் தவித்தேன். அழுதேன். எப்பொழுது இறந்தாள் என்றே தெரியவில்லை. தொட்டி அருகே இருந்த தண்ணியில் விழுந்து இறந்துவிட்டிருந்தாளாம். புழு மேய்ந்ததாம். மார்ஷல் தான் வந்து என்னிடம் கூறினான். அன்பு ராஜ் தான் தொட்டியை சுத்தப்படுத்தினான் என்று வீரா மாமா கூறினார். கட்டி வைத்திருந்த தமிழ் அவிழ்த்துக்கொண்டு துரத்தியதால் தான் இது நேர்ந்தது என்று கூறினார். ஆற்றுப்படுத்த துணை தேவையாக இருந்தது. எலிகளை வேடிக்கைப் பார்த்தேன். இரவில் உடைந்த ஓட்டு வழியே எட்டிப் பார்த்த புளிய மரத்தாளே துணையாக நின்றாள். எனக்கு ஷெல்டரை முடிக்க வேண்டும். நிறைய நாய்க்குடிகளை எடுத்து வளர்க்க வேண்டும். சாலையில் எலும்புக் கூடுகளாய் நிற்கும் நாய்குட்டிகளை பார்க்கும் பொழுது, கண்ணில் இரத்த ஆறே ஓடுகிறது. நான் ஏதாவது செய்ய வேண்டும். நேற்று காலை (24.01.2024...

நாட்குறிப்பு - 01.02.2024 -தமிழ்ச்செல்வி ஜி.ஜே (Managing Trustee)

Image
  மனம் கனத்துக்கிடக்கிறது. கையில் எடுத்த வேலை பெரிதோ என்று மனம் மருகிப்போகிறது. நாய்க்குட்டிகளின் மரணம் அதீத வலியை தின்னக்கொடுக்கிறது. நான் சோர்ந்துவிட்டேன். என்னால் சந்தோஷமாக இருக்க முடியவில்லை. நான் இன்னும் நாய்குட்டிகளுக்கான அந்த வீட்டை கட்டிமுடிக்கவில்லை. பணம் இல்லாமல் பணிகள் பாதியில் நிற்கிறது. அந்த கட்டடத்தை பூச வேண்டும். மின்சாரம் வாங்க வேண்டும். பென்சிங் போட வேண்டும். நாய்குட்டிகள் அந்த நிலத்தில் சுதந்திரமாக விளையாட வேண்டும். மற்ற நிலத்துக்காரர்களுக்கு தொந்தரவாகக் கூடாது. அதோடு உடல்நிலை சரியில்லாத நாய்குட்டிகளை தனித்தனியாக தங்க வைக்க அறை வேண்டும். கூண்டு அவர்களுக்கு ஆரோக்கியமானதாக இல்லை. நான் இன்னும் இரு தாய்மார்களுக்கு உதவ விரும்புகிறேன். அதில் ஒருவர் மிகவுமே உதவி தேவைப்படக் கூடியவர். மருத்துவ உதவியும் அவருக்குத் தேவை. குறைந்த பட்சம் உணவுத் தேவையையாவது பூர்த்தி செய்யலாமே என்று தோன்றுகிறது. உதவுங்கள்… அவர் என்னிடம் வாக்கர் கேட்டார்… வாக்கர் வாங்குவதற்கான தொகையை யாரேனும் கொடுத்து உதவினால் மகிழ்வேன். வாகனங்களை நிதானமாக ஓட்டுங்கள். உங்கள் உயிர் உங்களுக்கு முக்கியம். ...

நாட்குறிப்பு - 23.01.2024 -தமிழ்ச்செல்வி ஜி.ஜே (Managing Trustee)

Image
  இந்த கடுமையான நாட்கள் என் வாழ்க்கையின் இருண்ட காலம். நாய்க்குட்டிகள் எனக்கு எந்த அளவிற்கு மகிழ்ச்சி அளித்ததோ, அந்த அளவிற்கு வருத்தத்தையும், ஏச்சுக்களையும் கொடுத்தது. நாய்களால் பெருந் துயரத்திற்கு ஆளானேன். உன்னால முடிஞ்சா வளர்க்கனும், இல்லாட்டி எங்கயாச்சும் ரோட்டுல கொண்டு போய் விடு… குடும்பத்தினர் பின்வாங்கத் துவங்கினர். உதவிகள் கிடைக்கவில்லை. மனச்சோர்வில் இருந்து வெளிவர நாய்க்குட்டிகள் செய்த அத்தனை உதவிகளும், நாய்குட்டிகளாலேயே இயலாமைக்கும், மனச்சோர்விற்கும், தள்ளப்பட்டேன். ஒவ்வொரு நாய்குட்டி இறக்கும் போதும், நான் பெற்ற குழந்தைகளே இறப்பது போல மனமும் உடலும் நடுங்கியது. முதல் முறை புத்திர சோகத்தை, முதல் கருப்பன் விபத்தில் இறந்த போது அடைந்தேன்.   அதன் பிறகு சில மாதங்கள் மகிழ்ச்சியும், அதன் பின் சோகமுமாக கடந்தது. சமீபத்தில் ஆறு நாய்குட்டிகளில் ஒரு ஆண் குட்டி தான் மீதம், பயந்துகொண்டு போய் குடற்புழு நீக்கம் செய்ய கொண்டு வந்த ஒரு குட்டியை அவள் தாயிடமே கொண்டு போய் விட்டேன்.   இரண்டு நாட்களாக அவளைக் காணவில்லை. மனம் அவளை தேடுகிறது. என் இயலாமை என்னால் அவளைக் கண்டு பிடிக்க முடியவி...

நாட்குறிப்பு - 20.12.2023 -தமிழ்ச்செல்வி ஜி.ஜே (Managing Trustee)

Image
  அவனுக்கு என்ன பெயர் வைப்பது என்று தெரியவில்லை. அவன் ஒரு ஆண்பிள்ளை. நாய்களுக்கு நான் தனித் தனிப் பெயர் வைத்துதான் அழைக்கிறேன். தடுப்பூசி பதிவேட்டிலும் எழுதுகிறேன். சில சமயம் ஐந்து ஆறு குட்டிகள் எனும் போது அது முடியாத செயலாகிவிடுகிறது. அவன் மலம் சாதாரணமாக கழிக்கிறான். அவனைத் தடுப்பூசி போட அழைத்துச்செல்லவேண்டும்.                                அவன் நீங்களாவது ஒரு பெயர் சொல்லுங்கள். அப்படியே வைத்துவிடுகிறேன்.   பெயர் வைப்பது அத்தனை இலகுவாக இல்லை. நிறைய பெயர்கள் வைத்துவிட்டேன். லொடுக்கு, குறள், வெண்பா, கார்த்திகா, ராம், பூம்பா, கோக்கோ,லச்சு, நேத்ரா, லூனா, யாழி, தமிழ், ராஜா, புட்டு, கிட்டு, புசுபுசு, ராபர்ட்… நாய்குட்டிகள் இறந்தபோதெல்லாம் அழுதேன். விபத்தில் நாய்கள் இறந்த போதும்… அழகான ஒரு நாய்குட்டியை பார்த்துவிட்டு வீடு வந்திருப்பேன். அதிகாலை சாத்தனூர் செல்லும் போது நைந்த தோலாக சாலையில் கிடக்கும். மனம் பதறி போகும். கவனமாக வாகனங்களை ஓட்டுங்களேன். மனித குழந்தையைக் காட்டிலும் நாய்குழந்தைகள் அ...